சூர்யா, சிவகார்த்திகேயனை தொடர்ந்து முன்னணி நடிகருடன் இணையும் பிரியங்கா மோகன்.. சுவாரஸ்யமான தகவல்
பிரியங்கா மோகன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை பிரியங்கா மோகன்.
இதன்பின், நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் கதாநாயகியாக நடித்து தற்போது இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

தென்னிந்திய அளவில் சென்சேஷன் கதாநாயகியாக இருக்கும் இவர் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்துள்ளார்.
இதுமட்மின்றில் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்க பிரியங்கா கமிட்டாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

புதிய படம்
இந்நிலையில், தற்போது ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகனை தேர்வுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
M.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் படத்தில் தான், பிரியங்கா மோகன் நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.