"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா..
ஆட்சியை பிடித்த விஜய்
கடந்த 2024-ஆம் ஆண்டு கட்சி தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து மாபெரும் சாதனை படைத்துள்ள விஜய்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றபின் 717 டஸ்மாக் மூடப்பட்டது, சிங்கப்பேன் அதிரடிப்படை, 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இதற்காக பாராட்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும், மற்ற செயல்களுக்காக விஜய்யின் ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்களும் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.
சினிமா டூ அரசியல்
எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, சிவாஜி கணேசன், டி.ஆர், விஜயகாந்த், சீமான், கமல் ஹாசன், குஷ்பூ, உதயநிதி, விஜய் என பலரும் சினிமாவிலிருந்து அரசியலில் களமிறங்கியுள்ளனர். இதில் சிலர் வெற்றி பெற்றாலும் பலரும் எதிர்பார்த்த இடத்தை அடைய முடியவில்லை.

சூர்யா
இந்த நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கப்போவதாக பேச்சு ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

சமீபத்தில் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், "காலம் முடிவு செய்துவிட்டது. கடவுள் முடிவு செய்துவிட்டார். அவர் மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது." என கூறியுள்ளார். இதன் மூலம் அவர் அரசியலில் என்ட்ரி தரப்போகிறாரா என பேசப்பட்டு வருகிறது.
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri