விஷால் போட்ட திட்டம்.. விஜய்யை காபி அடிக்கிறாரா?
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை வர வைத்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை விஜய் நடத்தினார்.
அந்த விழாவுக்காக சில கோடி ரூபாயை விஜய் செலவளித்ததாக கூறப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியதும் பரபரப்பாக பேசப்பட்டது.

காபி அடிக்கிறாரா விஷால்?
இந்நிலையில் விஷாலும் அதே போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது தேவி அறக்கட்டளை முலமாக அவர் ஏற்கனவே பல ஏழை மாணவர்களின் பட்ட படிப்புக்கு உதவி வருகிறார்.
அந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வர வைத்து ஒரு பெரிய விழாவை விஷால் நடத்த திட்டமிட்டு வருகிறாராம். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விமல் மகனை பார்த்திருக்கிறீர்களா? இவ்வளவு வளர்ந்துவிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோ இதோ