லால் சலாம் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு.. என்ன தெரியுமா?
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தவர்.
பின் நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவிலும் இயக்குனராக களமிறங்கினார்.
தனது கணவரை வைத்து 3 படத்தை இயக்கி மாஸ் ஹிட் கண்டார். அதன்பின் வை ராஜா வை இயக்கினார், ஆனால் படம் சரியாக ஓடவில்லை.
கடைசியாக விஷ்ணு விஷால், விக்ராந்த் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க லால் சலாம் என்ற படத்தை இயக்கினார், ஆனால் இந்த படம் சுமாராக தான் ஓடியது.
புதிய தொடக்கம்
இடையில் நடிகர் தனுஷுடன் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து எல்லாம் பெற்றார்.
தற்போது தனது அடுத்த படத்தை இயக்க ரெடியாகிவிட்டாராம் ஐஸ்வர்யா, நடிகர் சித்தார்த்திடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம்.
ஆனால் அந்த படத்தை தயாரிக்க யாரும் முன் வராததால் தானே தயாரிப்பாளராக களமிறங்கிவிடலாம் என்ற முடிவு எடுத்துள்ளாராம் ஐஸ்வர்யா.