ஐஸ்வர்யா ராய் மகளை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்! காரணம் இந்த வீடியோ தான்
சமூக வலைத்தளங்கள் பக்கம் போனாலே சினிமா நட்சத்திரங்களை ட்ரோல் செய்வதற்கென்றே ஒரு பெரிய கூட்டம் இருக்கும்.
அதிலும் சின்ன சின்ன காரணங்களுக்காக பிரபலங்களை மிக மோசமாக ட்ரோல் செய்யும் சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி அவர்களது குழந்தைகளுக்கும் புகழ் வெளிச்சம் எளிதில் கிடைப்பது போல, சமூக வலைத்தளங்களில் அவர்களும் அதிகம் ட்ரோல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.
அந்த லிஸ்டில் தற்போது சிக்கி இருப்பது ஐஸ்வர்யா ராய் மகள் ஆரத்யா தான். ஆரத்யா அவரது பெற்றோர் உடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு தற்போது மும்பைக்கு திரும்பி இருக்கிறார்.
மும்பை விமான நிலையத்தில் அவர்கள் அந்த இறங்கி வெளியில் வரும்போது ஆர்த்யா நடந்து வந்த விதத்தை பார்த்து தான் நெட்டிசன்கள் மோசமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
அது மட்டுமின்றி ஐஸ்வர்யா ராய் மகளை எப்போதும் கையை பிடித்து கூட்டிச்செல்வதையும் நெட்டிசன்கள் விமர்சித்து இருக்கின்றனர். அவர் என்ன இன்னும் சின்ன குழந்தையா என கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
இப்படி சின்ன குழந்தையை கூட விடாமல் ட்ரோல் செய்வது சரியல்ல என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ட்ரோலுக்கு காரணமான வீடியோ இதோ..