சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி.. மாமனார் அமிதாப் பச்சன் பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா ராய் போட்ட பதிவு

By Parthiban.A Oct 11, 2024 11:19 PM GMT
Report

நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமா மட்டுமின்றி தமிழிலும் மிக பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார்.

ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக்கை விவாகரத்து செய்யப்போவதாக தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. இருப்பினும் அவர் சமீபத்தில் திருமண மோதிரத்தை காட்டி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தார்.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி.. மாமனார் அமிதாப் பச்சன் பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா ராய் போட்ட பதிவு | Aishwarya Rai Post Amitabh Bachchan 82Nd Birthday

சர்ச்சை

ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சன் வீட்டில் மாமியார் - மருமகள் சண்டை நடக்கிறது, அதனால் ஐஸ்வர்யா தனியாக வசித்து வருகிறார் என்றும் ஒரு செய்தி வந்தது.

மேலும் நிகழ்ச்சிகளுக்கு வந்தால் கூட அமிதாப் குடும்பத்துடன் ஐஸ்வர்யா வரமாட்டார். மகளை அழைத்துக்கொண்டு தனியாக தான் வருவார்.

அமிதாப் பச்சன் பிறந்தநாள் பதிவு

இந்நிலையில் அமிதாப் பச்சன் 82வது பிறந்தநாளான நேற்று ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர். ஐஸ்வர்யா ராய் எந்த பதிவும் போடாமல் இருந்த நிலையில் நாள் முடியும் நேரத்தில் இரவு 12 மணி அளவில் ஒரு பதிவை இன்ஸ்டாவில் போட்டிருக்கிறார்.

பேத்தி ஆரத்யா உடன் அமிதாப் பச்சன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார். அதை நாள் முடிய சில நிமிடங்கள் இருக்கும்போது அவர் பதிவிட்டு இருக்கிறார்.

சண்டை என்ற சர்ச்சைக்கு இது முற்றுப்புள்ளி வைக்கிறது என ஒரு சிலர் கூறினாலும், அந்த பதிவை அவ்வளவு தாமதமாக போட்டது மீண்டும் சர்ச்சையை இணையத்தில் கிளப்பி இருக்கிறது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US