அமிதாப் பச்சன் குடும்பத்தை விட்டு தனியாக வந்த ஐஸ்வர்யா ராய்.. அம்பானி வீட்டு திருமணத்தில் நடந்த சம்பவம்

By Parthiban.A Jul 13, 2024 08:50 AM GMT
Report

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் 2007ல் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்க்கும் பச்சன் குடும்பத்திற்கும் பிரச்சனை என கூறி அடிக்கடி விவாகரத்து செய்திகளும் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் அதை மறுக்கவும் இல்லை, உறுதி செய்யவும் இல்லை.

அமிதாப் பச்சன் குடும்பத்தை விட்டு தனியாக வந்த ஐஸ்வர்யா ராய்.. அம்பானி வீட்டு திருமணத்தில் நடந்த சம்பவம் | Aishwarya Rai Seperate From Bachchan Family

தனியாக வந்த ஐஸ்வர்யா ராய்

நேற்று நடந்த ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண நிகழ்வுக்கு ஒட்டுமொத்த சினிமா நட்சத்திரங்களும் வந்து கலந்துகொண்டனர். அமிதாப் பச்சன், அபிஷேக் ஒன்றாக குடும்பத்துடன் வந்தனர், ஆனால் அவர்கள் உடன் ஐஸ்வர்யா ராய வரவில்லை.

ஐஸ்வர்யா மற்றும் மகள் ஆராத்யா ஆகியோர் தனியாக வந்து போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்த்தனர்.

அதனால் பச்சன் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை வெளிப்படையாக தெரிகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US