உடல்எடை குறித்த உருவக் கேலிக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் கொடுத்த செம பதிலடி..
ஐஸ்வர்யா ராய்
இந்திய மக்களால் என்றுமே உலக அழகியாக கொண்டாடப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
பாலிவுட் சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி நாயகியாக கெத்து காட்டி வந்தவர் தமிழிலும் ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். கடைசியாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் Cannes திரைப்பட விழாவில் கலக்கிய புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது..
நடிகை பதிலடி
நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த 2011ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
அதன்பின் உடல் ரீதியான மாற்றங்களால் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து உருவக் கேலிக்கு ஆளாகினார். தனக்கு வந்த உருவக் கேலி குறித்து ஐஸ்வர்யா ராய், ஆராத்யா பிறந்த பிறகு கொஞ்சம் எடை கூடியதற்காக பல சந்தர்ப்பங்களில் என்னை உருவகேலி செய்கிறார்கள்.
ஆனால் நான் உடல் எடை கூடினால் உங்களுக்கு என்ன பிரச்சனை, மகள் பிறந்த பிறகு நான் எடை கூடினேனா? அல்லது உடலில் நீர் பிடித்ததா என்னும் விஷயங்களைப் பற்றி உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆர்வம்.
என்னை விட என் மீது உங்களுக்கு அக்கறை அதிகமா? என் எடையால் எனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை.
என்னை பற்றி யார் என்ன நினைத்துக் கொண்டாலும் என்ன பேசினாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கோபமாக கூறியுள்ளார்.