விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் இவர் தான் கதாநாயகனா? யார் தெரியுமா
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன், விவாகரத்தை சமூக வலைத்தளத்தில் ஒன்றாக அறிவித்தனர்.
ஆனால், இது வெறும் குடும்ப சண்டை தான் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

விவாகரத்துக்கு பின்
விவாகரத்துக்கு பின் இருவரும் தங்களது வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஐஸ்வர்யா அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்தில், ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யாவின் இரண்டாவது கணவர் விசாகன் தான், ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹீரோவாக விசாகன் ?
சௌந்தர்யாவின் இரண்டாவது கணவரும் பிரபல தொழிலதிபருமான விசாகன், கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த ’வஞ்சகர் உலகம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்கனவே நடித்திருந்தார்.

இதனால், இப்படத்தில் அவரை ஹீரோவாக நடிக்க வைக்க ஐஸ்வர்யா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகிறதா என்று..