இது மட்டும் போதும்.. மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்ட போட்டோ வைரல்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து பெறுவதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில் அறிவித்தபோது ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
அவர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்கள் குழந்தைகளுக்காக பிரியாமல் இருக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். ரஜினிகாந்த் தரப்பும் அவர்களை சமரசப்படுத்த முயற்சித்ததாக செய்திகள் வந்தது.
இருப்பினும் தனுஷ் தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் படங்களில் நடிப்பதில் பிஸியானார். ஐஸ்வர்யாவும் ஒரு ஹிந்தி படத்தை இயக்குவதாக அறிவித்தார்.

சில தினங்களுக்கு முன்பு தனுஷ் தன் மகன்களை தான் நடித்த ஹாலிவுட் படத்தின் ஷோவுக்கு அழைத்து சென்ற ஸ்டில்கள் வைரல் ஆனது.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா மகன்களை கட்டிப்பிடித்து இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். "சில நேரங்களில்.. அவர்களது hug மட்டும் இருந்தால் மட்டும் போதும்" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அது தற்போது வைரல் ஆகி வருகிறது.
