மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்.. யாருடைய தயாரிப்பில் தெரியுமா
ரஜினிகாந்த்தின் மகளும், தனுஷின் மனைவியுமானவர் ஐஸ்வர்யா தனுஷ்.
இவர் தமிழில் வெளியான '3' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து 'வை ராஜா வை' என்ற படத்தை இயக்கினார்.
இதன்பின் எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா தனுஷ், தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
இந்த படத்தை பிரபல நிறுவனமான லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த படத்தை பிரபல நிறுவனமான லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராக இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் புகழ் பெற்ற தெலுங்கு நடிகர் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.