தோல்வியடைந்த கோப்ரா, கைகொடுக்குமா டிமாண்டி காலனி 2.. புது படத்திற்காக முன்னணி நடிகையுடன் கைகோர்த்த அஜய் ஞானமுத்து
அஜய் ஞானமுத்து
டிமாண்டி காலனி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஜய் ஞானமுத்து, அந்த வெற்றியை தொடர்ந்து இயக்கிய திரைப்படம் தான் இமைக்கா நொடிகள்.
இப்படமும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன்பின் விக்ரமை வைத்து கோப்ரா படத்தை இயக்கினார். கிட்டத்தட்ட 4 வருட உழைப்புக்கு பின் இப்படம் திரையரங்கில் வெளிவந்தது.
மக்களிடம் இருந்து இப்படத்திற்கு நல்ல விமர்சனமும் வரவேற்பும் கிடைக்கவில்லை. தோல்வியை தழுவிய கோப்ரா படத்திற்கு பின் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிமாண்டி காலனி 2.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக இப்படம் அஜய் ஞானமுத்துவிற்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய படம்
இந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த புதிய புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் நடிகை பூஜா ஹெக்டே தான் நடிக்கவுள்ளாராம்.
இப்படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.