ஒரே வரியில் அஜித் பதிலடி! தன் மீது இருந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தற்போது கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவர். குட் பேட் அக்லீ படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் உடன் இரண்டாவது முறையாக அவர் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.
அஜித் சினிமாவுக்குள் நுழைந்ததற்கு எஸ்பிபி-யின் சிபாரிசு தான் காரணம் என நீண்ட காலமாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. அந்த செய்திக்கு அஜித் தற்போது முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.
முற்றுப்புள்ளி
சினிமாவில் 33 வருடங்கள் நிறைவு செய்ததற்கு அவர் வெளியிட்ட அறிக்கையில் "இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். முழுக்க முக்குமா என் சுய முயற்சியால் மட்டுமே சினிமா துறைக்குள் நுழைந்தேன்."
"காயங்கள், மீண்டு வருதல், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால் நான் தளர்ந்து போகவில்லை, முயற்சி செய்தேன், மீண்டு வந்தேன், தொடர்ந்து முன்னேறுகிறேன்!"
இதன் மூலம் தன் மீது இருக்கும் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அஜித்.

