நடிகர்களில் அஜித்-கவுண்டமணி மட்டுமே செய்த மாஸான காரியம்- என்னது பாருங்க
சினிமா நடிகர்களை பற்றி அவர்களின் காதுக்கே வராத செய்திகள் கூட அவர்களது ரசிகர்களுக்கு முதலில் வந்துவிடும்.
அந்த அளவிற்கு பிரபலங்களை பற்றி தெரிந்துகொள்வதில் ரசிகர்களுக்கு ஆர்வம். சந்தோஷமோ, துக்கமோ எதுவாக இருந்தாலும பிரபலத்துக்கு ஒன்று என்றால் அது தனது வீட்டில் நடந்தது போல் சந்தோஷப்படுவார்கள்.
ரசிகர்களுக்காக அவர்களுடன் எப்போது இணைப்பில் இருப்பதற்காக நடிகர்கள் பலர் மன்றங்கள் வைத்திருப்பது நமக்கு தெரிந்த விஷயம்.
ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள்.
ரஜினி, கமல், விஜய் ஆரம்பித்து இப்போது வளர்ந்து வரும் நடிகர்கள் வரை ரசிகர் மன்றங்கள் உள்ளது. ஆனால் தனக்கு ரசிகர் மன்றங்கள் எதுவும் வேண்டாம் என தைரியமாக கலைத்தார் அஜித்.
அவரது செயல் மிகவும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது, முதலில் உங்களது குடும்பத்தை கவனியுங்கள் என்றார்.
அவரைப்போலவே சினிமாவில் உச்சத்தில் இருந்த போது தனக்கு எந்த ரசிகர் மன்றமும் வேண்டாம் என இருந்திருக்கிறார் கவுண்டமணி.
இவர்கள் இருவரும் மட்டும் தான் தங்களுக்கு ரசிகர்கள் மன்றங்கள் வேண்டாம் என தைரியமாக கூறியவர்கள்.