கூட்டத்தின் நடுவே அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... AK என்ன செய்தார் பாருங்க!
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றியடைந்தது.
தற்போது கார் ரேஸிங் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.

என்ன செய்தார்?
இந்நிலையில், மலேசியாவில் உள்ள செபாங்கில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்தின் ரேஸிங் அணி பங்கேற்றது.
அப்போது அஜித்தைக் காண அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்தனர். ரேஸ் முடிந்த பின்னர் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் அஜித்.
அவரைக் காணவும், அவருடன் போட்டோ எடுக்கவும் ஏராளமானோர் திரண்டதால் அந்த இடமே சிறிது நேரத்தில் பரபரப்பானது. ஆனால் அஜித் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கூட்டத்தின் நடுவே நின்றபடி ஒரு செல்ஃபி எடுத்திருக்கிறார்.
அது மட்டுமின்றி தனி தனியாகவும் அவர் போட்டோ எடுத்துள்ளார். தற்போது, இது தொடர்பான ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,
My Man 🤩🫶🥹 #Ajithkumar !! pic.twitter.com/c8YWDmEdoI
— AJITH UK FANS ™ (@AjithUKFans) December 6, 2025