இனி முடியவே முடியாதுங்க, ஆல்யா மானசா கூறிய அதிர்ச்சி தகவல்
ராஜா ராணி 2
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2.
இதில் கதாநாயகியாக ஆல்யா மானசாவும், கதாநாயகனாக சித்துவும் நடித்து வந்தனர். இதற்கிடையில் நடிகை ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தது, சீரியலில் இருந்து வெளியேறினார்.
இவருக்கு பதில் ரியா என்பவர் புதிதாக ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடிக்கவந்துள்ளார்.
ஆல்யா மானசா, குழந்தை பிறந்தபிறகு மீண்டும் சீரியலுக்கு நடிக்க வந்துவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நான் இனி சீரியலில் நடிக்க வர மாட்டேன் என்று ஆல்யா கூறியதாக தகவல் வெளியானது.
இனி நான் வர மாட்டேன்
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இனி நான் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடிக்க வரவேமாட்டேன் என்று தெள்ளத்தெளிவாக' கூறியுள்ளார் ஆல்யா மானசா.
இதன்முலம், இனி சந்தியா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்கப்போவது நடிகை ரியா தான், என்பது உறுதியாகிவிட்டது.
அரபிக் குத்து பாடலுக்கு ஒட்டுமொத்தமாக நடனம் ஆடிய குக் வித் கோமாளி பிரபலங்கள்.. வீடியோவை பாருங்க