விஜய்யிடம் இருந்து வாங்கிய துப்பாக்கி.. லியோவை மிஞ்சிய அமரன்
விஜய்யிடம் இருந்து வாங்கிய துப்பாக்கி
கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த கோட் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

அந்த காட்சியில் நடிகர் விஜய் தன் கையில் இருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்துவிட்டு செல்வார். இதனால் சினிமாவில் தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துவிட்டு அரசியலுக்கு சென்றுவிட்டார் விஜய் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் செல்லும் இடமெல்லாம் துப்பாக்கியின் கணம் எப்படி இருக்கிறது, அடுத்த தளபதி நீங்கள் தானா என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது.
லியோவை மிஞ்சிய அமரன்
தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த அமரன் உலகளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி கொண்டு இருக்கிறது. இதுவரை உலகளவில் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் மலேசியாவில் விஜய்யின் கோட் படத்தை மிஞ்சியுள்ளது.

ஆம், மலேசியாவில் அமரன் வெளிவந்து இரண்டாம் நாளில் இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படத்திற்கு வந்திருந்த மக்கள் கூட்டம் வந்துள்ளது என சொல்லப்படுகிறது. கிட்டதட்ட 1.35 லட்சம் மக்கள் அமரன் படத்தை பார்க்க இரண்டாம் நாள் வந்துள்ளார்களாம்.

இதற்கு முன் இந்த சாதனையை லியோ படம் செய்திருந்த நிலையில், தற்போது லியோ, ஜெயிலர் என அனைத்து படங்களின் சாதனையையும் முறியடித்து புதிய சாதனையை அமரன் படைத்துள்ளது. மேலும் இது மலேசியாவில் இரண்டாம் நாளுக்கான விவரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan