அமரன் படம் வேண்டாம் என்றேன்.. முகுந்தனின் அம்மா வேதனை, ஏன் தெரியுமா?
அமரன்
சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி முதல் முறையாக இணைந்து நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அமரன். கமல் ஹாசன் தயாரிப்பில் உருவான இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

கடந்த ஆண்டு திரைக்கு வந்த சூப்பர் ஹிட் படங்களில் அமரன் திரைப்படமும் ஒன்று. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்களும் பாராட்டி இருந்தனர்.
ஏன் தெரியுமா
இந்நிலையில், அமரன் திரைப்படத்தை எடுக்க வேண்டாம் என்று கூறியதாக முகுந்த் வரதராஜனின் அம்மா தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முகுந்த் வரதராஜனின் அம்மா அங்கு பேசிய சில விஷயங்கள் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், " அமரன் படத்தை எடுக்க வேண்டாம் என்று நான் முதலில் சொன்னேன். அதற்கு முக்கிய காரணம் என் மகனின் நினைவு வந்து கொண்டே இருக்கும், அது எனக்கு மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் தான் வேண்டாம் என்றேன்.
ஆனால், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி என்னை இறுதியில் சம்மதிக்க வைத்து விட்டார்" என்று கூறியுள்ளார்.
You May Like This Video
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri