முன்னாள் மனைவிகளை வாரம் தோறும் தவறாமல் சந்திக்கும் ஆமிர் கான்.. விவாகரத்துக்கு பின்பும் ஒரே குடும்பம் தானாம்
அமீர் கான்
பாலிவுட் திரையுலகில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமிர் கான். இவர் நடிப்பில் தற்போது லால் சிங் சத்தா எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அண்மையில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகை கரீனா கபூருடன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியை ஆமிர் கானிடம் தனது முன்னாள் மனைவிக்கு குறித்து எழுந்த கேள்விக்கு ஆச்சரியப்படுத்தும் வகையில் பதிலளித்துள்ளார்.
வாரம் தோறும் தரவாமல் சந்திக்கும் ஆமிர் கான்
தனது முன்னாள் மனைவிகள் ரீனா மற்றும் கிரண் இருவரையும் வாரத்தில் ஒரு முறையாவது சந்தித்துவிடுவாராம். அதுமட்டுமின்றி தற்போதும் இருவருடனும் நல்ல நட்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், விவாகரத்து ஆகிவிட்டாலும் அனைவரும் ஒரே குடும்பம் தான் என்றும் ஆமிர் கான் கூறியுள்ளார். இவருடைய இந்த பதில் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
1986ஆம் ஆண்டு ரீனா என்பவரை திருமணம் செய்த ஆமிர் கான், 2002ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன்பின், 2005ஆம் ஆண்டு கிரண் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஆமிர் கான், கடந்த 2021ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.