திருமணமாகியும் தனியாக இருக்கிறோம்.. காரணம் இதுதான்.. நடிகை பாவனி ரெட்டி ஓபன் டாக்
அமீர் - பாவனி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் அமீர் - பாவனி ரெட்டி. இவர்களுடைய திருமணம் கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்கள் இருவரும் இணைந்து அஜித்துடன் துணிவு படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின் நடிகை பாவனி தனது கணவருடன் சேர்ந்து சொந்தமாக வீடு கட்டியுள்ளார். புதிய வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இது புதிய தொடக்கம் என பதிவு செய்திருந்தார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை அமீர் - பாவனிக்கு தெரிவித்திருந்தனர்.

பாவனி ஓபன் டாக்
இந்த நிலையில், திருமணத்திற்கு பின் அமீர் - பாவனி பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதை பற்றி பேசிய பாவனி, "அமீரின் அசைக்கும் கனவுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். நான் சென்னையில் இருந்தால் அமீர் என்னுடன் தான் எப்போதும் இருப்பார். இதனால் அவரது இலக்கை நோக்கி அவரால் ஓட முடியாது. இதற்காக இருவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். அவரின் விருப்பப்படி நாங்கள் இருவரும் திருமணமாகியும் தனியாக இருக்கிறோம்" என கூறியுள்ளார்.