இரவு 3 மணிக்கு நிலம் வாங்கிய நடிகர் அமிதாப் பச்சன்.. அதுவும் எத்தனை கோடிக்கு பாருங்க
நடிகர் அமிதாப் பச்சன் ஹிந்தி சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு நபராக இருந்து வருகிறார். 83 வயதிலும் பிஸியாக அவர் படங்கள், விளம்பரங்கள், போன்றவற்றிலும் நடித்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன் அமிதாப் பச்சன் அயோத்தியில் ஒரு நிலம் வாங்கி இருந்தார். 15 கோடி ரூபாய்க்கு 15000 சதுரடி பிளாட் ஒன்றை அவர் வாங்கி இருந்தார்.
அதை தொடர்ந்து சமீபத்தில் 35 கோடி ரூபாய்க்கு 2.67 ஏக்கர் நிலத்தை அமிதாப் வாங்கி இருந்தார்.

இரவு 3 மணிக்கு வாங்கினார்
அமிதாப் பச்சன் இரவு மூன்று மணிக்கு போன் செய்து அயோத்தியில் இருக்கும் ப்ளாட்டை வாங்க வேண்டும் என கூறினார் என ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் அபிநந்தன் என்பவர் பேட்டி கொடுத்திருக்கிறார்.
இரவு மூன்று மணிக்கு விலை பேசி முடித்து, உடனே மறுநாள் 15 கோடி ரூபாயை அனுப்பி இருக்கிறார்.

இரவில் டீல்
அந்த நேரத்தில் இரண்டு மிஸ்டு கால் இருந்ததால் உடனே போன் செய்து பேசினேன். அவர் நிலத்தை பற்றி கூறி பணம் அனுப்பினார் என அவர் கூறி இருக்கிறார்.