அன்பே டயானா திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
அன்பே டயானா
இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, ஹீரோவாக நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் அன்பே டயானா.
இப்படத்தில் நடிகை ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் இதற்கு முன் தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும், நடிகை ரோஜா பல ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர் சேத்தன், பரிதாபங்கள் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.
காதல், நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், 3 நாட்களில் உலகளவில் அன்பே டயானா திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 3 நாட்களில் இப்படம் ரூ. 3 கோடி உலகளவில் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.