நிகழ்ச்சி மேடையில் கதறி அழுதுள்ள தொகுப்பாளினி அர்ச்சனா... காரணம் இந்த போட்டோ தான், இதோ
சரிகமப 4
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4.
20க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்க அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார். நடுவர்களாக ஸ்ரீநிவாஸ், எஸ்.பிபி. சரண், ஸ்வேதா மோகன் மற்றும் சைந்தவி ஆகியோர் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு வாரமும் மக்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.
அர்ச்சனா
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவின் வாழ்க்கையில் ஒரு சோகமான விஷயம் சமீபத்தில் நடந்தது.
அதாவது அவரது தாயார் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரின் அம்மாவின் உயிரிழப்பிற்கு சரிகமப நிகழ்ச்சியில் பிராத்தனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் அர்ச்சனா அவரது அம்மாவுடன் இருப்பது போல ஒரு புகைப்படத்தை சரிகமப நிகழ்ச்சி குழு பரிசாக கொடுக்க அந்த போட்டோவை பார்த்து எமோஷ்னல் ஆகிறார் அர்ச்சனா. இதோ பாருங்கள்,