என் வாழ்க்கையில் அப்படி ஒரு மோசமான சம்பவம் நடந்தது- நடிகை ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா
நடிகை, பாடகி என தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் ஆண்ட்ரியா. இப்போது நடிப்பதை தாண்டி நிறைய பாடல்கள் பாடுவதில் தான் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வப்போது அவர் நடிப்பில் படங்களும் வெளியாகி வருகின்றன.
அடுத்து நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் அனல் மேல் பனித்துளி என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.
நடிகை ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி வெளியாக இருக்கிறது.
முன்பு நடந்த சம்பவம்
நகருக்கு வரும் பெண்கள் பொதுவெளிக்கு வரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தான் இப்படக்கதை. 11 வயது இருக்கும் போது நான் வேளாங்கண்ணிக்கு பேருந்தில் சென்றேன். அப்போது எனது பின்னாடி இருந்த ஒருவன் எனது சட்டைக்குள் கை நுழைக்க முயற்சி செய்தான்.
பின் எழுந்து முன்பு உட்கார்ந்து கொண்டேன், கல்லூரியிலும் இதுபோல் நடந்தது.
இந்த படத்திலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தான் பேசப்படுகிறது என கூறியுள்ளார்.