அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் சாமியார் அம்மாவை சிந்தாமணி ஏற்பாடு செய்து, அவரை விஜயா வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அந்த சாமியார் இந்த வீட்டில் மீனா இருந்தால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து என கூற விஜயா அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

இதனால், உடனடியாக மீனாவை இந்த வீட்டிலிருந்து வெளியேற சொன்னார். ஆனால், இதெல்லாம் மூடநம்பிக்கை என முத்து, அண்ணாமலை ரவி ஆகியோர் கூறினார்கள். இதனால் விஜயாவால் மீனாவை வீட்டில் இருந்து வெளியேற்ற முடியவில்லை.
மருத்துவமனையில் அண்ணாமலை
இந்த நிலையில், வரும் வாரம் சிறகடிக்க ஆசையில், முகம் தெரியாத ஒருவர் பைக்கில் வந்து அண்ணாமலையை இடித்துவிட்டு சென்று விடுகிறார். அண்ணாமலை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கால், கை மற்றும் தலையில் அடிபட்டுள்ளது என மருத்துவர் கூறுகிறார்.

மீனாவால் தான் இது நடந்துள்ளது, இந்த வீடு விளங்காமல் போவதற்கு மீனாதான் காரணம் என விஜயா சொல்ல, மருத்துவமனையில் இருந்து மீனா வெளியேறுகிறார்.

அண்ணாமலையின் இந்த நிலைக்கு தான் காரணம் என விஜயா கூறுவதால் மனமுடைந்து போகும் மீனா குடும்பத்தில் உள்ள யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து செல்கிறார். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! IBC Tamilnadu
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri