அவரை வைத்து ரமணா 2 படம் எடுக்க ஆசை, யார் அவர்?.. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு

By Yathrika May 15, 2025 04:00 PM GMT
Report

படைத்தலைவன்

கேப்டன் விஜயகாந்த், தமிழ் சினிமா என்றும் மறக்க முடியாத நடிகர்.

படத்தில் நடிக்கும் போதே தன்னுடைய நாட்டுப்பற்று, எல்லோருக்கும் மனதார உதவி செய்வது போன்ற விஷயங்களை அதிகம் காட்டினார். இவரது மகனான சண்முக பாண்டியன் அவரது அப்பாவை போல சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் படைத்தலைவன். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மே 15, அதாவது இன்று சென்னையில் நடந்தது.

அவரை வைத்து ரமணா 2 படம் எடுக்க ஆசை, யார் அவர்?.. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு | Ar Murugadoss About Ramana Movie 2Nd Part

முருகதாஸ் பேச்சு

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏ.ஆர்.முருகதாஸ் பேசுகையில், கேப்டன் விஜயகாந்தால் தமிழ் சினிமாவில் பயன் அடைந்தவர்கள் பலர், அவர்களில் நானும் ஒருவன்.

அவரால் இன்றைக்கும் பலர் தங்களது பசியை போக்கி வருகிறார்கள். கேப்டன் படப்பிடிப்புக்கு வருகிறார் என்றாலே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடி விடுவார்கள் அவரது கம்பீரம் வேறு எந்த நடிகருக்கு வரும்.

அவரை வைத்து ரமணா 2 படம் எடுக்க ஆசை, யார் அவர்?.. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு | Ar Murugadoss About Ramana Movie 2Nd Part

அதேபோல் ரமணா படத்தில் இடம்பெற்ற மிக நீண்ட வசனங்கள் தொடங்கி அவரது டயலாக்குகள் அனைத்துமே அதிகபட்சம் இரண்டு டேக்குகள் மட்டும் தான் எடுத்துக் கொண்டார்.

படைத்தலைவன் படத்தில் ஒரு யானையும் ஒரு சிங்கமும் நடித்துள்ளது போல் உள்ளது, வளர்ந்து வாங்க சண்முக பாண்டியன்.

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் கண்கள் அவரது மகன் சண்முக பாண்டியனிடம் அப்படியே இருக்கிறது, இவரை வைத்து ரமணா 2ம் பாகம் எடுக்க ஆகை என பேசியுள்ளார்.    

அவரை வைத்து ரமணா 2 படம் எடுக்க ஆசை, யார் அவர்?.. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு | Ar Murugadoss About Ramana Movie 2Nd Part

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US