விஜய் படம் கைவிட்ட ஏ.ஆர். முருகதாஸிற்கு அடித்த ஜாக்பாட்- இப்படிபட்ட பிரம்மாண்ட படமா?
தமிழ் சினிமாவின் நம்பிக்கையான இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர் முருகதாஸ். இவர், விஜய்யை வைத்து மறுபடியும் படம் இயக்க போகிறார் என செய்தி வந்தது.
ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாகவும் செய்திகள் எல்லாம் வந்தது. ஆனால் கதையில் விஜய்க்கு சில அதிருப்தி ஏற்பட படத்தை கைவிட்டார். விஜய் அடுத்து நெல்சன் கதையை தேர்வு செய்து அதில் பாதி நடித்துவிட்டார்.
முருகதாஸ் ஒரு அனிமேஷன் படம் இயக்க முடிவு செய்ததாக கூறப்பட்டது. அதன்படி இப்போது வந்த தகவல் என்னவென்றால் பான் இந்திய படமாக உருவாகும் அது ஒரு ஃபேன்டஸி த்ரில்லராம்.
படத்தில் கிராபிக்ஸ் அதிகமாம்.
சில இந்தி படங்களை தயாரித்த பிரபல விஎஃப்எக்ஸ் ஸ்டுடியோ முருகதாஸ் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வருகிறதாம்.
பெரும் பொருட்செலவில் படத்தை எடுக்கிறார்களாம். படப்பிடிபப்பை 2022ம் ஆண்டின் துவக்கத்தில் துவங்க திட்டமிட்டுள்ளார்களாம்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
