முதன்முறையாக ஒரு பாடலை இசையமைக்கும் போது அழுத ஏ.ஆர்.ரகுமான்... அவரே பகிர்ந்த தகவல்
ஏ.ஆர்.ரகுமான்
தமிழ் சினிமா பெருமையாக கொண்டாடும் ஒரு இசையமைப்பாளர் தான் ஏ.ஆர்.ரகுமான்.
இந்திய சினிமாவிற்கு ஆஸ்கர் மேடை வரை ஏறி பெருமை தேடித்தந்த ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து இசைத்துறையில் பல சாதனைகளை செய்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறிவிட்டது என கூறியிருந்தார். அவரின் அந்த பேச்சிற்கு கடும் எதிர்ப்புகளும், அதே சமயம் ஆதரவும் கிடைத்து வந்தது.

அழுத பிரபலம்
தற்போது ஒரு பேட்டியில் தான் இசையமைத்து பாடல் ஒன்று குறித்தும் அதனால் நடந்த சம்பவம் குறித்தும் பேசியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அதில் அவர், ஒரு பாடலுக்குள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருந்ததால் அது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு இசையமைக்கும் சமயத்தில் நான் நோன்பில் இருந்தேன். அப்போது தான் அப்பாடலுக்கான டியூன் எனக்கு வந்தது. அந்த டியூனை வாசித்தபோது நான் அழுதுவிட்டேன், இதுதான் நாம் எதிர்ப்பார்த்த டியூன் என்று உணர்ந்தேன் என கூறியுள்ளார்.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri