ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து செய்தது ஏன்?- ஓபனாக கூறிய ஏ.ஆர். ரெய்ஹானா
விவாகரத்து
சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்திகள் தான் அதிகம் வருகின்றன.
நாக சைத்தன்யா-சமந்தா, தனுஷ்-ஐஸ்வர்யா, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இப்போது ஜெயம் ரவி-ஆர்த்தி என பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் ரசிகர்களை கடும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டது என்றே கூறலாம்.
ஆர்த்தி-ஜெயம் ரவி விவாகரத்து பிரச்சனை தான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
ஏ.ஆர்.ரெய்ஹானா

ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெய்ஹானா புதியதாக ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். மாத்திக்கலாம் மாலை என்கிற ஆல்பத்தை உருவாக்கிய அவர் அப்பாடலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் அவரின் மகனும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், சிலருக்கு சூழ்நிலை அப்படி அமைந்து விடுகிறது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri