2024ல் வசூல் சாதனை படைத்த அரண்மனை 4.. யாரும் எதிர்பார்க்காத கலெக்ஷன்
அரண்மனை 4
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்கள் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸை நெருங்கவில்லை. இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தது.
கடந்த மே 3 ஆம் தேதி சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த அரண்மனை 4 ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. உலகளவில் இப்படம் வசூல் சாதனைகளை தொடர்ந்து படைத்து வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத சாதனையை தற்போது செய்துள்ளது.
ரூ. 100 கோடி வசூல்
அதன்படி, இப்படம் இதுவரை அரண்மனை 4 திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 2024ஆம் ஆண்டு தமிழில் இருந்து வெளிவந்த திரைப்படங்களில் அரண்மனை 4 திரைப்படம் தான் முதன் முதலில் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸை தொட்டுள்ளது.
மேலும் இதுவரை வெளிவந்த அரண்மனை திரைப்படங்களில் இப்படம் தான் முதன் முதலில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை அரண்மனை 4 படக்குழு கொண்டாடி வருகிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
