சர்வைவர் முடிந்ததும் அர்ஜுன் பற்றி வந்த ஷாக்கான தகவல்
ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி ஆகி இருக்கிறது. அதை அவரே இன்ஸ்டாக்ராமில் தெரிவித்து இருக்கிறார்.
ஜீ தமிழின் சர்வைவர் ஷோவை அவர் தொகுத்து வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் ஷூட்டிங் ஆப்ரிக்காவில் ஒரு தீவில் நடைபெற்றது. ஒரு கோடி ரூபாய் பரிசு தொகை கொண்ட அந்த போட்டியில் நடிகை விஜயலக்ஷ்மி முதலிடம் பிடித்து இருக்கிறார். பைனல் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் ஒளிபரப்பானது. இந்நிலையில் அர்ஜுன் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
"நான் வழிமுறைகளை பின்பற்றி தற்போது தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறேன். என்னை சந்தித்தவர்கள் டெஸ்ட் எடுத்துக்கொண்டு எச்சரிக்கையாக இருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்."
"நான் நன்றாக தான் இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். மாஸ்க்கை மறந்துவிடாதீர்கள்" என அர்ஜுன் பதிவிட்டு இருக்கிறார்.

ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri