மீண்டும் சீதாவை அடித்த அருண்.. சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்
காரை அடகு வைத்த முத்து
செல்வம் கார் அருண் அம்மா மீது மோதியதால் அவர் மரணமடைந்தார். தனது அம்மாவின் மரணத்திற்கு காரணம் செல்வம் மட்டுமல்ல முத்துதான். முத்து சொல்லித்தான் செல்வம் இப்படி செய்திருக்கிறான் என அருண் நினைத்துக்கொண்டிருக்கிறார்.

செல்வம் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கவேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் தரவேண்டும் என வக்கீல் முன் அருண் கூறியிருந்தார். அதன்பின், செல்வம் ரூ. 1.60 லட்சம் தயார் செய்துவிட்டார். மீதி பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில், முத்து தனது இரண்டு கார்களில் ஒன்றை சத்யா வேலை பார்க்கும் இடத்தில் அடகு வைத்துவிட்டார்.
சீதாவை அடித்த அருண்
செல்வம் ரூ. 5 லட்சத்தையும் அருணிடம் கொடுத்துவிட்டார். வீட்டிற்கு பணத்துடன் வந்த அருணிடம் 'செல்வம் அண்ணனால் பணத்தை ரெடி பண்ண முடியவில்லை, முத்து மாமாதான் காரை அடகு வைத்து பணத்தை கொடுத்துள்ளார்' என சீதா கூறுகிறார்.

முத்துவிற்கு ஆதரவாக சீதா பேசியதால் 'என்னை விட உனக்கு உங்க அக்கா, மாமா, செல்வம்தான் முக்கியமா? என்று கேட்டு கடுப்பான அருண், மீண்டும் தனது மனைவி சீதாவை அடித்தார். ஏற்கனவே அருண் தன்னை அடித்ததை தனது அக்காவிடம் சீதா கூறியிருந்தார்.

ஆனால், முத்துவிடம் இருந்து இந்த விஷயத்தை மறைத்துவிட்டனர். தற்போது மீண்டும் சீதாவை அருண் அடித்துள்ள நிலையில் இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? IBC Tamilnadu
சில நிமிடங்களில் 30,000 பேரைக் கொன்ற கொடிய எரிமலை... பல தசாப்த கால அமைதிக்குப் பிறகு மீண்டும் News Lankasri
ஒரு பவுன் தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் - பட்ஜெட்டில் அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு! IBC Tamilnadu