நீங்களே இவ்ளோ வாங்கினா எப்படி.. விஜய், அஜித்தை தாக்கி பேசிய அருண் பாண்டியன்!
தற்போது கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். அவர்கள் இருவரது பெயரையும் குறிப்பிட்டு தயாரிப்பாளரும் நடிகருமான அருண் பாண்டியன் தாக்கி பேசி இருக்கிறார்.
அருண் பாண்டியன்
நடிகர் அருண் பாண்டியன் இன்று நடந்த ஒரு திரைப்பட விழாவில் பேசினார். அப்போது அவர் 18 வருடங்களுக்கு பிறகு தான் அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்ததாக கூறி இருக்கிறார். அந்த படம் தனக்கும் தன் மகளுக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்ததாக கூறி இருக்கிறார் அவர்.

அஜித் விஜய்யை தாக்கி பேச்சு
அஜித் விஜய்யை தாக்கி அருண் பாண்டியன் பேசியதாவது..
"தமிழ் சினிமாவில் பொற்காலம் எல்லாம் பாரதிராஜா சார் படம் பண்ணிட்டு இருந்தபோது. இப்போது எல்லாம் அப்படி இல்லை. எல்லா மொழி படங்களும் தற்போது தமிழ்நாட்டில் கொடி கட்டி பறந்துகொண்டிருக்கிறது."
"சமீபத்தில் வந்த அஜித் படமோ, விஜய் படமோ சினிமாவுக்கு செலவு செய்வதில்லை.. தனக்கு செலவு செய்துகொள்கிறார்கள். 90 சதவீதம் அவர்கள் வாங்கினால் எப்படி படம் எடுக்க முடியும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்."
"அப்போது எல்லாம் சம்பளத்திற்கு 10 சதவீதம் போகும்.. மீதம் 90 சதவீதம் படம் எடுப்பதற்கு இருந்தது" என அவர் கூறி இருக்கிறார்.