3 வாரங்களுக்கு பின் வீடு திரும்பும் ஆர்யன் கான், ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது மும்பை உயர்நீதி மன்றம் !
மும்பை சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக பாலிவுட் ஸ்டார் ஷாருக் கானின் 23 வயதான மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு NCB-யால் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்து இதுவரை சுமார் 3 வாரங்கள் ஆகியிருக்கிறது. இரண்டு முறை ஜாமீன் கேட்டு வாதாடப்பட்டும் ஆர்யனுக்கு ஜாமீன் வழங்கப்படாததால் அவரை அக்டோபர் 8-ம் தேதி முதல் மும்பை ஆர்துர் ரோட் சிறையில் அடைத்தது போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குழு.
இந்நிலையில் தான் இன்று அவரது ஜாமீன் மனு மீண்டும் மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வாதத்திற்கு பின் தற்போது அவருக்கு மும்பை உயர்நீதிமண்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தற்பொழுது இந்த செய்தி தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.