போர் தொழில் 2ம் பாகம்.. அசோக் செல்வன் கொடுத்த சூப்பர் அப்டேட்
போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அசோக் செல்வன் பேட்டி அளித்து இருக்கிறார்.
அசோக் செல்வன்
நடிகர் அசோக் செல்வன் தற்போது அவரது கெரியரின் உச்சத்தில் இருக்கிறார். அவர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் ரிலீஸ் ஆன போர் தொழில் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் அசோக் செல்வன் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல நடிக்கற் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை தான் அசோக் செல்வன் காதல் திருமணம் செய்ய இருக்கிறார்.
போர் தொழில் 2
இந்நிலையில் சமீபத்தில் போர் தொழில் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் என அசோக் செல்வன் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.
இரண்டாம் பாகத்தின் கதை பல்வேறு விதங்களில் நகர option இருக்கிறது என்றும், கதை எப்படி இருக்கும் என்பதை இயக்குனர் விக்னேஷ் தான் முடிவு செய்வார் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan
