சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் குறித்து அதர்வா கொடுத்த அப்டேட்...என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது.
நிஜ கதையை மையப்படுத்தி வெளியான இப்படம் வசூல் வேட்டை நடத்தியதோடு மக்களுக்கு பிடித்தமான படமாக அமைந்தது.
பராசக்தி
அமரன் திரைப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். அப்பட வேலைகளை முடித்தவர் அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், அதர்வா, ஜெயம் ரவி போன்ற பிரபல நடிகர்களும் நடிக்கிறார்கள்.
நடிகர் பதில்
அண்மையில் நடிகர் அதர்வா நடிப்பில் டி.என்.ஏ படம் வெளியானது.
இந்த படத்தை காண மதுரை வந்த அதர்வாவிடம் செய்தியாளர்கள் சில கேள்விகள் கேட்டனர். அப்போது பராசக்தி படம் குறித்து அவர் அப்டேட் கொடுத்துள்ளார், அதில் அவர், இன்னும் 2 மாதங்களில் பராசக்தி படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறியுள்ளார்.