பிரமாண்டமாக தொடங்கிய அட்லீ - ஷாருக் கான் படத்தின் ஷூட்டிங்..
இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக விளங்குபவர், இவரின் இயக்கத்தில் வெளியான 4 படங்களுமே பிளாக் பஸ்டர் தான்.
அட்லீ அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும், நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோ ஷூட்டிங் கடந்த திங்கட்கிழமை அன்று பிரமாண்ட செட் அமைத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தில் ஷாருக் கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், இது தமிழில் வெளியான விஜயகாந்தின் பேரரசு திரைப்படம் போல இருக்கும் எனவும் கூறப்படுகிறது.