ஆட்டோகிராஃப் நடிகை கோபிகாவை நியாபகம் இருக்கா.. இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா
கோபிகா
2002ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த Pranayamanithooval படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கோபிகா.
இதன்பின் தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த நடிகை கோபிகாவிற்கு தமிழில் அறிமுகம் கொடுத்த திரைப்படம் தான் ஆட்டோகிராஃப்.

சேரன் இயக்கி நடித்த இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். குறிப்பாக மனசுக்குள்ளே காதல் வந்துச்சா பாடல் இவருக்கு நல்ல பிரபலத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு என தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகை கோபிகா 2013ஆம் ஆண்டு சினிமாவில் இருந்து விலகினார்.
Bharya Athra Pora என்ற திரைப்படத்தில் தான் நடிகை கோபிகா கடைசியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபியின் குடும்பம்
கடந்த 2008ஆம் ஆண்டு அஜிலேஷ் சாக்கோ என்பவர் திருமணம் செய்துகொண்ட நடிகை கோபி தற்போது கணவர், இரு பிள்ளைகளுடன் செட்டிலாகிவிட்டார்.
இந்நிலையில், தனது குடும்பத்துடன் கோபிகா எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..


சஞ்சு சாம்சன் உலகத்தரம் வாய்ந்த வீரர்: அவருடையது சாதாரண கிரிக்கெட் ஷாட்கள் - கவுதம் காம்பீர் IBC Tamilnadu
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri