சோழன், நிலாவிடம் மன்னிப்பு கேட்ட சேரன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ
அய்யனார் துணை
ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர்களில் ஒன்றாக உள்ளது அய்யனார் துணை. இப்போது கதையில் யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது.
அதாவது அண்ணன் அண்ணன் என பாசமாக இருந்த சேரனிடம் நிலா சண்டை போட்டதை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. தன்னைப்பற்றிய உண்மையை ராகவிடம் கூறியது தப்பு, அதனால் அவன் தன்னிடம் கேவலமாக பேசினான் என கூறி நிலா மிகவும் வருத்தப்பட்டார்.

இன்றைய எபிசோடில், ராகவ் வீட்டிற்கு சென்று சோழன் செம அடி கொடுத்துள்ளார், இனி நிலாவிடம் இப்படி நடந்தால் அவ்வளவு தான் என மிரட்டினார்.
சேரன், நிலாவிடம் பேச முயற்சி செய்ய கடைசியில் எதுவும் நடக்கவில்லை.

புரொமோ
தற்போது அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோவில், சேரன் சோழனிடம் மன்னிப்பு கேட்க அவர் தனது அண்ணனை சமாதானம் செய்கிறார். பின் நிலாவிற்கு சேரன் காபி கொடுக்க அதை வாங்கி அவர் கீழே வைத்துவிடுகிறார்.

பின் சேரன் அழுதபடி கைகூப்பி மன்னிப்பு கேட்க நிலா கஷ்டப்படுகிறார். கை கீழே இறக்குங்கள், நானும் அப்படி உங்களை பேசியிருக்க கூடாது. நீங்கள் செய்த விஷயத்தால் கோபம் வந்துவிட்டது என அவர் தோல் மீது சாய்ந்து அழுகிறார்.
இதோ அய்யனார் துணை புதிய புரொமோ,