பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன், நிலா முன்பே நேர்ந்த சோகம்... அய்யனார் துணை புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, விஜய் டிவியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடர்களில் ஒன்று.
இந்த வருடம் தொடங்கப்பட்ட எல்லா தொலைக்காட்சி தொடர்களில் விஜய் டிவியின் அய்யனார் துணை சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. பாசத்தை வைத்து தமிழ் ரசிகர்களை கட்டிப்போடுவது வழக்கமாக சீரியல்களில் நடக்கிறது.
அப்படிதான் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் தொடரில் நிலாவின் அப்பா செய்த வேலைகள் தெரிய வந்த விறுவிறுப்பான எபிசோடுகள் வந்தன.
புரொமோ
தற்போது அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.
அதில், சோழன் போலீஸ் நிலையத்தில் இருப்பதை அறிந்து சேரன், நிலா ஆகியோர் வருகிறார்கள். அங்கு சோழன் என் மீது எந்த தவறும் இல்லை, அவர் தான் என் வண்டி மீது மோதினார் என கூறுகிறார்.
ஆனால் போலீஸ் அதிகாரி சோழனை அடித்து அவரிடம் இருந்த லைசன்ஸ் என எல்லாவற்றையும் வாங்கிக்கொள்கிறார். சோழனை அடித்ததை கண்டு நிலா பதறுகிறார், அடுத்து என்ன ஆகுமோ பொறுத்திருந்து பார்ப்போம்.