மாப்பிள்ளையாக கோவிலில் சேரன், கார்த்திகா வந்தாரா, திருமணம் நடந்ததா?- அய்யனார் துணை பரபரப்பு புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, விஜய் தொலைக்காட்சியில் வழக்கமாக வரும் குடும்ப கதையாக இல்லாமல் கொஞ்சம் மாறுபட்ட கதைக்களத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
நிலா சோழனை திருமணம் செய்து அவரது வீட்டிற்கு வர அவரது வாழ்க்கை அப்படியே மாறுகிறது. அதோடு அந்த வீட்டில் இருப்பவர்களும் நிலா வருகையால் சந்தோஷப்படுகிறார்கள்.
நிலா, சோழன், பாண்டியன், பல்லவன் இணைந்து சேரனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். முதலில் ஒரு பெண் பார்த்தனர் அது செட் ஆகவில்லை, பின் இன்னொரு பெண் பார்க்கிறார்கள், அதுவும் நடக்கவில்லை.
புரொமோ
இன்றைய எபிசோடில் கார்த்திகா, நிலா கோவிலில் திருமணம் குறித்து பேசுகிறார்கள். கார்த்திகா, சேரனை திருமணம் செய்து கொள்கிறேன் என கூற நிலா மற்ற ஏற்பாடுகளை செய்கிறார்.
நிலா குடும்பத்தினர் திருமணத்திற்கு கோவிலுக்கு வர கார்த்திகா அவரது அம்மா தற்கொலை செய்துகொள்வேன் என பயமுறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியே வர மறுக்கிறார். இதோ பரபரப்பான புரொமோ,