நிலா கேட்டும் செய்ய முடியாமல் காலில் விழுந்து கெஞ்சம் சோழன்... அய்யனார் துணை சீரியல் புரொமோ
அய்யனார் துணை
வசதியாக வாழ்ந்த தனது மனைவியை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என சோழன் நிலாவிற்காக ஒரு பெரிய வீடு வாடகை பார்க்கிறார்.
நிலாவை அழைத்துவந்த வீட்டை காட்டியவருக்கு ஷாக் தான். அதாவது நிலா எனக்கு இந்த வீடு பிடிக்கவில்லை, எல்லோருடன் இருப்பது தான் எனக்கு சந்தோஷம்.

எனக்கு என்ன சந்தோஷம் என்ற முடிவை நீங்களும் எனது அப்பாவும் ஏன் எடுக்கிறீர்கள் என சோழனை செமயாக திட்டிவிட்டார் நிலா.
இன்றைய எபிசோடில் இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள், நிலா சொன்ன விஷயங்களை கேட்டு சேரன், பாண்டி, பல்லவன் சந்தோஷப்படுகிறார்கள். பின் நிலா சோழனை அறைக்கு அழைத்து அவரை கட்டியணைத்து மன்னிப்பு கேட்கிறார்.

நான் கொஞ்சம் அதிகமாக கோபம் அடைந்துவிட்டேன், இங்கேயே இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி என பொறுமையாக கூறுகிறார்.
அந்த வீட்டிற்காக கொடுத்த அட்வான்ஸை திரும்ப வாங்கிவர கூறுகிறார்.

புரொமோ
அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோவில், நிலா வீட்டிற்காக வாங்கிய கடனை திருப்பி கொடுத்துவிட வேண்டும். போய் அட்வான்ஸ் வாங்கி வாருங்கள் என கூற சோழன் வீட்டு உரிமையாளரிடம் மனைவிக்கு வீடு பிடிக்கவில்லை என அட்வான்ஸ் கேட்கிறார்.

அவர் அட்வான்ஸ் எல்லாம் திருப்பி தர முடியாது என கூற சோழன் அவர் காலை பிடித்து கெஞ்சுகிறார். பின் எப்படியோ அட்வான்ஸ் பணத்தை வாங்கியவர் வீட்டிற்கு புதிய டிவி வாங்கி வருகிறார்.
சோழன் செய்த காரியம் நினைத்து நிலாவும் சந்தோஷப்படுகிறார்.