போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களமாக இருக்கிறது என கூறி ரசிகர்கள் கொண்டாடும் ஒரு தொடராக உள்ளது அய்யனார் துணை.
சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்ற 4 சகோதரர்களின் கதையை மையமாக கொண்டு தொடர் செல்ல இப்போது பரபரப்பான கதைக்களம் செல்கிறது.

ராகவ் பிரச்சனையால் நிலா ஆபிஸை விட்டு வெளியே வந்துவிட்டார், பாண்டி வானதி பேசாமல் இருப்பதால் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார். போன் செய்கிறார், வீட்டிற்கு செல்கிறார் ஆனால் வானதியை பார்க்கவோ, பேசவோ முடியவில்லை.
இன்னொரு பக்கம் பல்லவன் வீட்டில் பொய் சொல்லி பணம் வாங்கிவிட்டு புதிய காதலியுடன் சுற்றி வருகிறார்.

புரொமோ
தற்போது அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோவில், பல்லவன் காலேஜில் இருந்து சேரனுக்கு போன் வருகிறது. உங்களது தம்பி 1 வாரமாக காலேஜ் வரவில்லை, இப்படியோ போனால் கஷ்டம் என கூற அதைக்கேட்டு சேரன் ஷாக் ஆகிறார்.

போலீஸ் ஒரு ஹோட்டலில் போதை பயன்பாடு இருப்பதாக தேட அந்த ஹோட்டலில் பல்லவன் இருந்துள்ளார். போதை பொருள் பயன்படுத்தியவர் என போலீஸ் பல்லவனை கைது செய்ய அதை சோழன் பார்த்துவிடுகிறார்.
போலீஸிடம் அவர் கெஞ்சியும் பல்லவனை கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டனர்.