தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம்
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் அய்யனார் துணை.
கதையில் 4 சகோதரர்களுக்குமே இப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. முதலில் நிலா, ராகவ் தொல்லையால் வேலையை விட்டுவிட்டார், அதற்கு அவர் அழுவ சோழனும் மனம் தாங்காமல் அழ பின் சமாதானம் செய்கிறார்.

பாண்டி, வானதி தன்னிடம் பேசாமல், பார்க்காமல் இருப்பதால் தவித்து வருகிறார். அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோவில் பல்லவன் போலீசாரால் கைதாகிறார்.
இப்படி அண்ணன்-தம்பிகள் 4 பேருக்குமே ஏதோ ஒரு கஷ்டம் உள்ளது.
கொண்டாட்டம்
சீரியலே மிகவும் சீரியஸாக இருக்க இப்போது அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள் ரசிகர்களை குஷிப்படுத்த ஒரு ஷோவிற்கு வந்துள்ளனர்.

அதாவது விஜய் டிவியில் பிரியங்கா தொகுத்து வழங்க Happy Wife Happy Life என்ற புத்தம் புதிய ஷோ ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஷோவில் அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் முன்னா, அரவிந்த், அருண் 3 பேரும் தங்களது மனைவியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
பிரியங்கா இருந்தாலே கலாட்டாவாக இருக்கும் இதில் இவர்களும் கலந்துகொள்ள கண்டிப்பாக ஷோ சூப்பராக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri