சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ
அய்யனார் துணை
பாண்டியன் - வானதி திருமண பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில், நிலா நம் வீட்டை விட்டு வெளியேறிவிடுவாரோ என்கிற பயத்தில் தற்போது திருமணம் வேண்டாம் என பாண்டியன் கூறிவிட்டார்.

ஆனால், இதற்கு காரணமாக சேரன் அண்ணனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை, அதற்கு முன் நான் எப்படி திருமணம் செய்துகொள்வது என பாண்டி கூறினார். இந்த ஏமாற்றத்தை தாங்காத வானதி இனி நான் உன்னுடன் பேசமாட்டேன் என கோபத்துடன் கூறினார்.

உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்
சேரன் எடுத்து முடிவு
பாண்டியனின் திருமணம் ஒருபக்கம் இருக்க, தற்போது முதலில் சேரனின் திருமணத்தை முடித்துவிடலாம் என சோழன் - நிலா இருவரும் சந்தா வீட்டிற்கு வந்து அனீஷிடம் பேசுகிறார்கள். சேரனுக்கு சந்தாவை திருமணம் செய்துவைக்க தனக்கு முழு சம்மதம் என அனீஷ் கூறுகிறார்.

ஆனால், சோழன் - நிலா இன்னும் ஒன்றுசேர்ந்து வாழவில்லை, அவர்கள் இருவரும் சேர்ந்து வாழும் வரை நம் திருமணத்தை தள்ளி வைக்கலாம், அதற்கு உனக்கு சம்மதமா என சந்தாவிடம் சேரன் கேட்கிறார். இதற்கு சந்தாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதை வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.