நிலா கொடுத்த தரமான ஐடியா, சித்தப்பாவை கடத்தி... அய்யனார் துணை சீரியல் கலகலப்பான எபிசோட்
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியின் தரமான சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை சீரியல். கதையில் நடேசன் மற்றும் மகன்கள் வாழ்ந்த வீட்டைவிட்டு இப்போது அவர்கள் துரத்தப்பட்டார்கள்.
நிலா பாம்பு வந்தது என பயப்பட வீட்டை மாற்றலாம் என முடிவு எடுத்த வேகத்தில் நடேசன் தம்பி மற்றும் தங்கை போலீஸ் அழைத்து வந்து பிரச்சனை செய்து வீட்டிற்கு சீல் வைத்துவிட்டனர். இதனால் அண்ணன்-தம்பிகள், நிலா, நடேசன் என அனைவரும் பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

நிலா இப்படியே ஹோட்டலில் இருக்க முடியாது உயில் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்தாக வேண்டும் என்கிறார்.
இன்றைய எபிசோட்
இன்றைய எபிசோடில், நிலா-சோழன் ஒரு பிளான் போட்டு பாண்டி-பல்லவனை அழைக்கிறார்கள். காரில் உட்கார்ந்துகொண்டு சோழன், சித்தப்பாவை கடத்தி அவரிடம் உயில் குறித்து விசாரிக்க வேண்டும் என்கிறார்.

பாண்டி-பல்லவன் இருவரும் முகத்தை மறைத்து சித்தப்பாவை கடத்துகிறார்கள், அவரிடம் சொத்து இருக்கா, உயில் இருக்கா என விசாரிக்கிறார்கள். அவரும் உயில் என்னிடம் இல்லை, என் அண்ணனிடம் இருக்கும், ஆனால் அவனும் தொலைச்சிட்டான் என்கிறார்.
ஆனால் இன்றைய எபிசோட் கடத்தல் என மிகவும் கலகலப்பாக உள்ளது.
