பாண்டியை கல்லால் அடிக்கச்சென்ற வானதி, அப்படி என்ன ஆனது... அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
இந்த வார எபிசோடின் புரொமோவில், வானதி வீட்டிற்கு பெண் பார்க்க செல்லாமல் பாண்டி எங்கேயோ சென்றது போன்று புரொமோ காட்டப்பட்டது.
இந்த வாரத்தில் நடேசன் குடும்பம் கோலாகலமாக பொங்கல் கொண்டாடினார்கள், அந்த நேரத்தில் நிலாவிற்கு ராகவ் அடுத்த வருட பொங்கலை ஒன்றாக கொண்டாடலாம் என மெசேஜ் அனுப்பினார்.

அதைக்கேட்ட சோழன் அசிங்கமாக மெசேஜ் அனுப்ப அது நிலாவிற்கு பிரச்சனையாக அமைந்தது. நிலாவை ஆபிஸில் ராகவ் மோசமாக திட்ட, வீட்டிற்கு வந்த நிலா சோழனை மெசேஜ் அனுப்பியதற்காக கடுமையாக திட்டுகிறார்.
வானதி, சந்தா இருவரும் திருமணம் செய்து வீட்டிற்கு வரட்டும் நான் கிளம்புகிறேன் என்று சேரனிடம் கூறியுள்ளார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், பாண்டி வானதி வீட்டிற்கு சென்று முதலில் பெண் பார்க்க வராததற்கு மன்னிப்பு கேட்கிறார். பின் இப்போதைக்கு திருமணம் வேண்டாம், என் அண்ணனுக்கு நடக்க வேண்டும், அதன்பின் கண்டிப்பாக நான் வானதியை திருமணம் செய்துகொள்வேன் என்கிறார்.

அதுவரை நீங்கள் வெளியே இப்படி சுற்றிக்கொண்டு இருந்தால் என வானதி அப்பா கேட்க, பாண்டி திருமணம் நடக்கும் வரை வேண்டுமென்றால் நான் வானதியை பார்க்காமல் இருக்கிறேன் என்கிறார்.
அதையெல்லாம் கேட்ட வானதி, பாண்டியிடம் என்னை ஏமாற்றிவிட்டாய் என கோபமாக சண்டை போடுகிறார்.

இதை முன்னாடியே கூறியிருக்கலாம், என்னை என் வீட்டில் எவ்வளவு கேட்டார்கள் தெரியுமா, என்னை ஏமாற்றிவிட்டாய். திருமணம் ஆகும் வரை பார்க்க மாட்டேன் என்கிறாய், நீ என்ன சொல்வது எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம், இனிமே வானதி வாழ்க்கையில் பாண்டி கிடையாது என கோபமாக கூறிவிட்டு செல்கிறார்.
அவரை சமாதானப்படுத்த பாண்டி வானதி பின்னால் செல்ல அவரோ கோபத்தில் பக்கத்தில் இருந்த கல்லை தூக்கி பாண்டியை அடிக்கச் செல்கிறார்.