திருமண ஏற்பாடுகளுக்கு இடையில் நடேசனால் ஏற்பட்ட பிரச்சனை, செம கோபத்தில் சோழன்... அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
தமிழ் சின்னத்திரை சீரியல்களில் ஒரு திருமணம் பிரச்சனை இல்லாமல் நடக்கிறது என்றால் அது அற்புதம் தான்.
ஒரு கல்யாணத்தை வைத்து ஏகப்பட்ட பிரச்சனைகளை வைத்து அந்த கதைக்களத்தை பல மாதங்கள் ஓட்டிவிடுகிறார்கள். ஆனால் இப்போது ஒரு சீரியலில் ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய ஜோடியின் திருமணம் நடக்க உள்ளது.
வேறு யாரு விஜய் டிவியில் ஒளிபரப்பான அய்யனார் துணை சோழன்-நிலா ஜோடியின் திருமணம் தான். மாங்கல்யம் தந்துனானே என எந்த பிரச்சனையும் இல்லாமல் திருமணம் நடக்க உள்ளது.

எபிசோட்
இன்றைய எபிசோடில், சேரன், அப்பா-அம்மா வீட்டிற்கு சென்று கண்டிப்பாக நிலாவை நல்லபடியாக நாங்கள் பார்த்துக்கொள்வோம் என பேசுகிறார். அவர்களிடம் நிலாவை பற்றி பெருமையாக பேசுகிறார், சேரன் பேசுவதை கேட்டு அவர்களும் ஒரு மாதிரி ஆகிறார்கள்.
அடுத்து வீட்டில் திருமணத்திற்காக சோழன் மேக்கப் எல்லாம் போட்டு அலப்பறை செய்கிறார். அந்த நேரத்தில் குடும்பத்தினரை டென்ஷன் ஆக்கும் வகையில் சிலர் வீட்டிற்கு வருகிறார்கள்.

அதாவது நடேசன் டீ குடிக்க சென்ற இடத்தில் தனது மகனுக்கு திருமணம் என்கிறார். இதைக்கேட்டவர்கள் வீட்டிற்கு வந்து, அதான் ஏற்கெனவே சோழனுக்கு திருமணம் ஆனதே மீண்டும் என்ன.
உனக்கு திருமணம் ஆகவில்லை என்று மீண்டும் மீண்டும் உன் தம்பிக்கு திருமணம் செய்து வைக்கிறாயோ என பல கேள்விகள் எழுப்புகிறார்கள். அவர்களின் அடுத்தடுத்த கேள்வியால் சோழன் செம டென்ஷன் ஆகிறார்.

அந்த நேரம் நடேசன் வர அவரிடம் மகன்கள் சண்டை போடுகிறார்கள், அதற்கு அவர் மருமகள் வீட்டைவிட்டு போய்விட்டாலே என்றார்கள், அதான் சொன்னேன் என்கிறார். சோழன், நடேசன் செய்த காரியத்தால் செம டென்ஷன் ஆகிறார்.
அதன்பின் காலையில் ஜாலியாக திருமண விஷயங்கள் நடக்கிறது, மணமேடையில் நிலா-சோழன் திருமணத்திற்காக பூஜைகள் எல்லாம் செய்ய இன்றைய எபிசோட் முடிகிறது.