புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
பல்லவன் ஹோட்டல் சென்று மாட்டிக்கொண்ட பிரச்சனை இன்னும் முடியவில்லை. பாண்டி நேற்றைய எபிசோடில், பல்லவனிடம் பேசி சமாதானம் ஆகிவிட்டார்.
ஆனால் சோழன் மற்றும் சேரன், பல்லவனிடம் இன்னும் சமாதானம் ஆகவில்லை, அவர் பேச முயற்சி செய்தும் இருவரும் முகம் கொடுத்து கூட பேசவில்லை.

எபிசோட்
இன்றைய எபிசோடில், சோழனிடம் பல்லவன் மன்னிப்பு கேட்க அவரோ போய்விடு என்கிறார்.
பல்லவனின் அந்த நிலைமை பார்த்து பாண்டி பேசக்கூடாதா என கேட்க சோழன் செய்த தவறுக்கு இது தண்டனையாக இருக்கட்டும் என்கிறார். பின் நிலா, பாண்டியிடம் வானதியுடனான உறவு குறித்து பேசுகிறார்.

அவருக்காக நேரம் செலவிடு, அவரை எங்கேயாவது வெளியே அழைத்து செல்லுங்கள், மனம் விட்டு பேசுங்கள் என நிலா அறிவுரை கூறுகிறார். பின் நிலாவின் தோழி திவ்யா வீட்டிற்கு வருகிறார், அவர் கம்பெனி குறித்து பேசுகிறார்.

நிலா பார்ட்னர் ஆகவில்லை என போன் செய்து கூறிவிட்டதாக சேரன் மற்றும் சோழனிடம் கூறுகிறார். பின் ஒரு சூப்பரான விஷயம் கூறுகிறார், நாங்கள் இருவரும் ஒரு முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்.
அதுஎன்னவென்றால், நீ முதலீடு இப்போது போட வேண்டாம், ஆனால் பார்ட்னராக நீயும் இருப்பாய், உனக்கு பணம் எப்போது கிடைக்குமோ அப்போது தரலாம் என்கிறார். இதைக்கேட்டதும் முதலில் நிலா தயங்க பின் சோழன்-சேரன் சொன்னதும் ஒப்புக்கொள்கிறார்.
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri