பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல்

By Yathrika Mar 18, 2026 03:30 AM GMT
Report

அய்யனார் துணை

ரசிகர்கள் கொண்டாடிய அய்யனார் துணை சீரியலில் இப்போது பிரச்சனையாக சென்று கொண்டிருக்கிறது.

கடைசியாக பல்லவன் தனது தோழியை அழைத்துக்கொண்டு ஹோட்டல் சென்ற விஷயம் பரபரப்பாக போனது, ஆனால் எப்படியோ சேரன் தனது தெரிந்த அரசியல் பிரபலத்தை வைத்து பிரச்சனையை முடித்தார். 

பல்லவன் வீட்டிற்கு வந்ததும் அண்ணன்கள் அவரை அடித்து கடுமையாக பேசிவிட்டனர். அடுத்து வானதி-பாண்டி சண்டை போய்க்கொண்டு இருந்தது.

பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial March 18 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், நிலா தனக்கு நடந்த அசிங்கத்தை நினைத்து சோழனிடம் கூறி கதறி கதறி அழுகிறார், அதை சோழனால் ஏற்றுக்கொள்ளவே முடியவிவ்லை. பின் அவர் தான் வேலை செய்யும் ஒனரிடம் சென்று ரூ. 5 லட்சம் பணம் கேட்கிறார்.

பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial March 18 Episode

அவரோ உனக்கு எல்லாம் பணமா என கிண்டலாக பேசிவிட்டு தனது பணத்தை எண்ணி வைத்துவிட்டு செல்கிறார். 

பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial March 18 Episode

நிலா அழுததை தாங்க முடியாமல் சோழன் ஓனர் எண்ணி வைத்த பணத்தை திருடி விடுகிறார். அந்த பணத்தை கொண்டு போய் நிலா பார்ட்னரிடம் கொடுக்க எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள்.

பின் வீட்டிற்கு வந்த நிலா சோழன் பணம் கொடுத்த விஷயத்தை கூறி சந்தோஷப்படுகிறார். பணம் எப்படி வந்தது என சேரன் கேட்க அந்த நேரம் சோழனின் ஓனர் வீட்டிற்கு வருகிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US